இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் அறிகுறி !

இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில், புதிதாக கொரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென கடந்த 24 மணி நேரத்தில் குறைந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 567 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 97 லட்சத்து 3 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களுக்குப் பின் முதல் முறையாக கொரோனாவில் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 27 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 91 லட்சத்து 83 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94.59 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 729 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.96 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 385 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டெல்லியில் 63 பேரும், மகாராஷ்டிராவில் 40 பேரும், மேற்கு வங்கத்தில் 48 பேரும், கேரளா, ஹரியாணாவில் தலா 23 பேரும், சத்தீஸ்கரில் 21 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 20 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 14 கோடியே 88 லட்சத்து 14 ஆயிரத்து 55 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 26 ஆயிரத்து 399 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23 ஆம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5- ஆம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16- ஆம் தேதி 50 லட்சத்தையும், 28- ஆம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ஆம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29- ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20- ஆம் தேதி 90 லட்சத்தையும் கடந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here