கொரோனாவால் களையிழந்த நோபல் பரிசளிப்பு விழாக்கள்

ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடைபெறும் நோபல் பரிசளிப்பு விழாக்கள், இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று நெருக்கடி காரணமாக பல்வேறு மாற்றங்களுடன் மிக எளிமையாக நடைபெற்று வருகின்றன.

அந்தப் பரிசை உருவாக்கிய நோபலின் விருப்பப்படி, ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமிலும் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவிலும் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த முறை நோபல் பரிசு பெறுபவா்களின் சொந்த நாட்டிலேயே எளிமையான நிகழ்ச்சியில் அந்தப் பரிசுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற லூஸிஸ் குளூக்குக்கு அவரது இல்லப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தப் பரிசு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here