லண்டன்:
இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்தவர் ஜான் லெ காரே (89). ஆங்கிலத்தில் உளவு புனைகதைகளில் முதன்மையான எழுத்தாளராக விளங்கிய இவர், உளவாளியாகவும் வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில், ஜான் லெ காரே உடல்நலக் குறைவால் காலமானதாக இங்கிலாந்து ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
அவர் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என அவர் நடத்திவரும் நிறுவனம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
லு கேரி தனது அனுபவத்தைப் புனைகதைகளாக மாற்றுவதற்கு முன் இங்கிலாந்தின் உளவுத்துறையில் பணியாற்றினார் இவர்.
டிங்கர், தையல்காரர், சோல்ஜர் ஸ்பை உள்பட் பல்வேறு த்ரில்லர் நாவல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.