வாஷிங்டன்-
இதற்கிடையே, அதிபருக்கான அதிகாரத்துடன் அவர் பல்வேறு பதவிகளுக்கும் ஆட்களை நியமனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இந்திய வம்சாவளிகளான கவுதம் ராகவன் , வினய் ரெட்டி இருவருக்கும் இயக்குநர் அந்தஸ்திலான பதவிகளை ஜோ பிடன் வழங்கி உள்ளார். இதில், அதிபருக்கான அதிகாரிகள் அலுவலகத் துணை இயக்குநராக கவுதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களில் கவுதம், பிடன் அறக்கட்டளைக்கு ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இதுதவிர வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களின் வேறு சில பெயர்களையும் பிடன் அறிவித்துள்ளார்.