வாஷிங்டன்-
ஜோ பிடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
டிரம்பின் பிடிவாதத்தால் அதிகார மாற்றத்தை அட்மினிஸ்ட்ரேஷன்’ (ஜி.எஸ்.ஏ.) என்ற அரசு அமைப்பு ஜோ பிடனின் வெற்றியை அறிவிப்பதில் காலம் தாழ்த்தி வந்தது.
அதனைத் தொடர்ந்து ஜோ பிடனின் அதிகார பரிமாற்ற குழு ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகளை தீவிரப்படுத்தியது.
இந்த நிலையில் பதவியேற்பு விழாவுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் அமெரிக்க ராணுவம் தனது ஆட்சி அதிகார மாற்றத்துக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என ஜோ பிடன் குற்றம் சாட்டியுள்ளார்.
எனது அதிகார பரிமாற்ற குழு அரசியல் தலைமையிலிருந்து தடைகளை எதிர்கொண்டு வருகிறது. வெளி செல்லும் நிர்வாகத்திடம் இருந்து தேசிய பாதுகாப்பு துறையில் எங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் பெறவில்லை என்று பிடன் கூறியிருக்கிறார்.
இது ஒரு சிறிய விஷயம் அல்ல. என் பார்வையில் இது மிகவும் பொறுப்பற்ற தன்மையாகும்.
உலகெங்கிலும் உள்ள அமெரிக்க படைகள் குறித்த தெளிவான விவரங்கள் தேவை. ஏனெனில் அமெரிக்காவின் எதிரிகள் எந்தவொரு குழப்பத்தையும் பயன்படுத்தலாம். எனவே அமெரிக்க ராணுவம் எனது அதிகார பரிமாற்ற குழுவுடன் முழுமையாக ஒத்துழைத்து தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுதினார்.