மும்பை:
ஏழை பிள்ளைகளின் இந்த குறையை போக்க மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் உள்ள பந்தாலிக் நகர் போலீசார் புதுமை முயற்சியில் இறங்கி உள்ளனர். போலீஸ் நிலையத்தில் வைத்து கல்வி கற்றுக்கொடுக்க முடிவு செய்தனர்.
இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான எஸ்.பி. ஜவால்கரை அணுகினர். அவரும் தாயுள்ளதோடு இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்க முன் வந்தார். இதையடுத்து போலீஸ் நிலைய வளாகத்தில், அந்த பகுதியை சேர்ந்த குடிசைப்பகுதி மாணவர்களுக்கு ஆங்கிலம் , கணிதப் பாடம் கற்றுக்கொடுக்கும் பணி நேற்று 3- ஆவது நாளாக நடந்தது. இதில் முதல் கட்டமாக நடுநிலை பள்ளியைச் சேர்ந்த 14 மாணவ-மாணவிகள் பங்கேற்று உள்ளனர்.