புதுச்சேரி-
சமீபத்தில் அவர் கோவைக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்குகொரோனாதொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி, கவர்னர் மாளிகையில் பணிபுரியும் 25 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) தெரியவரும்.
ஏற்கனவே கவர்னர் மாளிகையில் அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கவர்னர் கிரண்பெடிக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.