வாஷிங்டன்:
இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் கைவிரித்து விட்டது. இப்படி தொடர்ந்து பல பின்னடைவுகளைச் சந்தித்து வந்தாலும் டிரம்ப் தனது முடிவில் இருந்து பின் வாங்காமல் பிடிவாதமாக உள்ளார்.
இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் தாம் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை ஏற்பாடு செய்யுமாறு மாகாண மந்திரி ஒருவரிடம் டிரம்ப் பேசும் ஆடியோ பதிவு வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜார்ஜியா மாகாணத்தின் உள்துறை மந்திரியான பிராட் ராக்பென்ஸ்பெக்கரிடம் டிரம்ப் பேசிய ஆடியோ பதிவை அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டது.
அந்த ஆடியோ பதிவில் டிரம்ப், பிராட் ராக்பென்ஸ்பெக்கரிடம் “ஜார்ஜியா மக்கள் கோபமாக உள்ளனர். நாடு முழுவதும் மக்கள் கோபமாக உள்ளனர். எனவே வாக்குகளை நீங்கள் மீண்டும் கணக்கிட்டீர்கள் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.
ஜார்ஜியா மாகாணத்தில் டிரம்ப் ஜோ பிடனிடம் 11,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் டிரம்பின் கூற்றினை மந்திரி பிராட் ராக்பென்ஸ்பெக்கர் நிராகரித்தார்.
மேலும் அவர் டிரம்பிடம் “மதிப்பிற்குரிய ஜனாதிபதி, உங்களிடம் உள்ள சவால், உங்களிடம் உள்ள தரவு தவறானது. உங்களிடம் தகவல்களை சமர்ப்பிக்கும் நபர்கள் இருக்கிறார்கள். அதேபோல் தகவல்களை சமர்ப்பிக்கும் எங்கள் மக்களும் எங்களிடம் உள்ளனர். பின்னர் அது நீதிமன்றத்தின் முன் வந்து நீதிமன்றம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாங்கள் எங்கள் எண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். எங்கள் எண்கள் சரியானவை என்று நாங்கள் நம்புகிறோம்” என பதிலளித்தார்.
ஒரு கட்டத்தில் தனது வெற்றிக்கு வாக்குகளை ஏற்பாடு செய்யவில்லை என்றால் விளைவு ஆபத்தானதாக இருக்கும் என டிரம்ப் மிரட்டுவதும் அந்த ஆடியோ பதிவு இடம்பெற்றுள்ளது.