பிரதமர் லீ சியென் லூங், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில், முதல் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார். இன்று காலை 11 மணிக்குப் பிறகு அவருக்கு Pfizer-BioNTech தடுப்பூசி போடப்பட்டது. அமைச்சரவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் உறுப்பினர் பிரதமர் லீ.
சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் கென்னத் மாக்கும் (Kenneth Mak) இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் சுகாதார ஊழியர்கள் சுமார் 90 பேருக்கு இன்று COVID-19 தடுப்பூசி போடப்படுகிறது.