புதுடெல்லி-
அமெரிக்க வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு நாடுகளும், நாடுகளின் தலைவர்களும் இந்த வன்முறை தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதற்கிடையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு பொறுப்பேற்று பல அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். மேலும், வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாராளுமன்ற கட்டடமான கேப்பிடலில் வன்முறை நடைபெற்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளில் ஹாவர்டு லைபென்குட் (51) என்ற போலீஸ் அதிகாரியும் ஒருவர்.
பாராளுமன்ற கட்டடம் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்தே இவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கேப்பிடல் கட்டட தாக்குதல் சம்பவம் நடந்து 3- நாட்கள் கடந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஹாவர்டு லைபென்குஇன்று (10- ஆம் தேதி) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பாராளுமன்ற கட்டிட வன்முறை சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஹாவர்டு லைபென்குட் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.