பிஜீங்:
உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்வில் வைரஸ் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான வுகான் நகரில் உள்ள ஒரு குகையில் கடந்த 2017- ஆம் ஆண்டு வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த விஞ்ஞானி வௌவ்வாலிடம் கடி வாங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டெய்லி மெயில், டெய்லி ஸ்டார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,
வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணியாற்றிவரும் சீனாவில் ’வௌவ்வால் பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஷிங் ஷன்லி தனது குழுவுடன் வுகானில் உள்ள ஒரு குகைப்பகுதிக்கு 2017- ஆம் ஆண்டு சென்றுள்ளார். சார்ஸ் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிக்காக அவர்கள் வௌவ்வாலை பிடித்து அதில் பரிசோதனை செய்துள்ளனர்.
வௌவ்வால் கடித்ததையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு சென்றபோது அந்த குழுவினர் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடை அணியவில்லை. சாதாரண உடை , கையுறை மட்டுமே அணிந்து சென்றுள்ளனர்.
கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பின் குழுவினர் சீனாவின் வுகான் நகருக்கு சென்றுள்ள நிலையில் 2017- ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாக வெளியான ஒரு புகைப்படம் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.