வாஷிங்டன்:
குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் , துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது.
அமெரிக்க அதிபராக வரும் ஜோ பைடன் வரும் 20- ஆம் தேதி பதவியேற்க உள்ளார். பைடன் பதவியேற்பு விழாவையொட்டி பாராளுமன்ற கட்டடம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அதிபர் டிரம்பின் பதவி காலம் வரும் 20- ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. வழக்கமாக அமெரிக்க அதிபர் ஒருவர் தனது பதவி காலம் முடிவடையும் போது அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் அதிபரின் அரசில் இடம்பெற்றிருந்த பலரும் வெளியேறும் அதிபருக்கு வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை கொடுப்பர்.
இந்நிலையில், இந்த பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க ராணுவத்திடம் கோரிக்கை விடுத்தார். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.