வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது; அமெரிக்க முதல் பெண் மெலனியா ட்ரம்ப் கருத்து

வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என அமெரிக்க முதல் பெண் மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்திற்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதற்கு பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்நிலையில் அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் இதுகுறித்து முதல் பெண்ணாக தமது கடைசி உரையில் பேசி உள்ளார்.

அதில், பொறுமை தான் அனைத்தும் என தெரிவித்துள்ள மெலனியா, வன்முறை எதற்கும் பதில் அல்ல என்றும் அதனை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here