ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசு சீல் வைத்தது.
இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்கத்தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வேதாந்தா நிறுவனம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கு விசாரணையின் போது, இடைக்காலமாக ஆலையை திறக்க அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை இல்லை என உத்தரவிட்டனர்.

அதே போல, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒரு போதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு தரப்பிலும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், முக்கிய வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here