அந்த வழக்கு விசாரணையின் போது, இடைக்காலமாக ஆலையை திறக்க அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை இல்லை என உத்தரவிட்டனர்.
அதே போல, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒரு போதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு தரப்பிலும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், முக்கிய வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என உறுதியளித்துள்ளது.