புதுடெல்லி:
உலக பொருளாதார மன்றத்தின் காணொலி காட்சி மாநாடு சுவிட்சர்லாந்தின், தாவோஸ் நகரில் நடக்கிறது. இந்த ஆண்டின் மாநாடு, ‘நம்பிக்கை மறுகட்டைமப்பு’ என்ற கருப்பொருளை கொண்டதாக உள்ளது. வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி, இந்த காணொலி கலந்துரையாடலில் உரையாற்ற உள்ளார்.
வர்த்தக துறை மந்திரி பியூஷ்கோயல், சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, ரெயில்வே, எண்ணெய், கியாஸ் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி ஆகியோரும் இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளனர். சீன அதிபர் ஜின்பிங், வரும் திங்கட்கிழமை பேசுகிறார்.