யாங்கூன் –
பொதுத்தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக நேற்று பாராளுமன்றம் கூட இருந்தது. இந்த கூட்டத்தொடரில் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத்தால் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு சட்டம் பிரிவு 417- இன் கீழ் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக ராணுவத்துக்குச் சொந்தமான மியாவாடி தொலைக்காட்சியில் அறிவிப்பு வெளியானது. மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க ஒரு வருட காலத்துக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது.
ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹியாங் நாட்டின் தலைவராக இருப்பார் என்றும், துணை அதிபர் மைன்ட் ஸ்வே அதிபராக (பொறுப்பு) உயர்த்தப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
ஆங் சான் சூகி
திடீர் ராணுவ புரட்சி காரணமாக மியான்மர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. நாட்டின் தலைநகர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மியான்மர் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.