ஈரோடு:
அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நிகார் ரஞ்சன், மாவட்ட வன அலுவலர் அருண்லால் ஆகியோரின் உத்தரவின் பேரில், பவானிசாகர் வனச்சரக அதிகாரி சரவணன், வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றார்கள். பின்னர் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்பின்னர் கால்நடை டாக்டர் அசோகன் கூறும்போது, இறந்து கிடந்தது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்று கூறினார். மேலும் யானையின் உடல் கூறுகள் பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பப்படும். அதன் முடிவு வந்த பின்னரே யானை எப்படி இறந்தது? என்று தெரியவரும் என்றார். பிறகு அதே இடத்தில் குழி தோண்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது.