கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சவுதி அரேபிய அரசு 20 நாடுகளில் இருந்து செல்வோருக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சவுதி அரேபிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதாவது, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. தூதரக அதிகாரிகள், சவுதி குடிமக்கள் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இதுவரை 3,68,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6,383 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.