பெண் பத்திரிகையாளரை மிரட்டினார் !
அமெரிக்காவின் 46- ஆவது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ஆம் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேறினார்.
இதையடுத்து தன்னுடைய பத்திரிகை இணை செயலாளராக டி.ஜி. டக்லோ என்பவரை அவர் நியமித்தார்.
இந்தநிலையில் சமீபத்தில் டி.ஜி.டக்லோ வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் இந்த விவகாரத்தில் டி.ஜி. டக்லோ தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு வார காலத்துக்கு ஊதியமின்றி அவர் பணி நீக்கம் செய்யப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேலும் டி.ஜி. டக்லோ தனது செயலுக்காக சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் நேரில் மன்னிப்பு கேட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இருப்பினும் டி.ஜி.டக்லோ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என அதிபர் ஜோ பைடன் மீது விமர்சனம் எழுந்துள்ளது.