வாட்ஸ் அப்பில் வருகிறது புதிதான அசத்தல் அப்டேட்!

வாட்ஸ் அப் பயனாளர்கள் லாக் அவுட் செய்யும் வசதியும், நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கும் அப்பேட்டும் விரைவில் வர இருக்கிறது.

இந்த புது அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் கணக்கை நீக்க முடியாது, ஆனால் லாக் அவுட் செய்து கொள்ளமுடியும். அதே போல் ஒரே கணக்கின் மூலமாக நான்கு சாதனங்களை இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இதன் மூலம் இணையத்துடன் இணைக்க தொலைபேசி இல்லாமலேயே வாட்ஸ் அப் வெப்-ஐ பயன்படுத்தலாம். லேப்டாப்பில் லாக் அவுட் செய்தால் போதும். மீண்டும் லாக் இன் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் எப்போதும் வேண்டுமானாலும் லாக் அவுட் செய்து லாக் இன் செய்து கொள்ளலாம். இந்த புது அப்டேட் பயனாளர்களின் தனித்துவத்திற்கு உதவிக்கரமாக இருக்கும்.

அதனால் இந்த புது அப்டேட்டை எதிர்பார்த்து வாட்ஸ் அப் பயனாளர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here