உலகில் கொரோனாவால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பைசர் , மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாவது தடுப்பூசியாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கும் அமெரிக்க உணவு, மருந்துக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தையும் அவசரகால தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.