–கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு!
இந்த நதிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள நதிகள் இணைப்பு திட்டம் குறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள், பிற சங்கங்களின் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு இருக்கும் நதிகள் இணைப்பு திட்டத்தை கண்டித்தும், அந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் மார்ச் 13-ஆம் தேதி கே.ஆர்.எஸ். அணையை நோக்கி பேரணி நடத்தவும், 27-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.