–வாபஸ் பெற்றார் ஜோ பைடன்
அந்த வகையில் வெள்ளை மாளிகையின் பட்ஜெட், அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் என்பவரை நியமிப்பதாக ஜோ பைடன் அறிவித்தார்.
ஆனால் வெள்ளை மாளிகையோ, பட்ஜெட், அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குநர் பதவிக்கு பொருத்தமான, தகுதியான ஒரே நபர் நீரா டாண்டன் மட்டுமே என கூறி வந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக நீரா டாண்டனின் நியமனத்தை வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். நீரா டாண்டனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்ஜெட், அலுவலக மேலாண்மை இயக்குநருக்கான வேட்புமனுவிலிருந்து தனது பெயரைத் திரும்பப் பெறக்கோரிய நீரா டாண்டனின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன்’’ என்று ஜோ கூறியுள்ளார்.