–நஷ்டஈடு கேட்டு மாப்பிள்ளை வீட்டார் புகார்
இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிட்டு இருவீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கினர். முன்னதாக இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற இருந்தது.
திருமண கனவுகளுடன் மணமகனும், அவரது உறவினர்கள், நண்பர்களும் திருமண மண்டபத்துக்கு வந்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு அறுசுவை விருந்தும் தயாரானது.
ஆனால், நீண்டநேரமாகியும் மணப்பெண் வீட்டார் யாரும் திருமண மண்டபத்துக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார், மணப்பெண் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டபோது, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகு நிலையம் சென்று வருவதாக கூறிச்சென்ற மணப்பெண் அதன்பிறகு மாயமாகி விட்டதாக தெரிவித்தனர்.
மணப்பெண் மாயமான தகவல் கேட்டு மணமகன் மற்றும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். திருமண வரவேற்பு நின்றதால், மணமக்களை வாழ்த்த வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சிக்காக களை கட்டி இருந்த திருமண மண்டபம் களை இழந்தது. அங்கு வைத்து இருந்த வாழ்த்து பேனர்களையும் கிழித்து எறிந்தனர். மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணப்பெண் மாயமானதால், மணமகளுக்கு எடுத்து கொடுத்த நகை, பட்டுப்புடவைக்கான பணம், வரவேற்பு நிகழ்ச்சிக்கு விருந்து வைக்க செய்த செலவு உள்ளிட்டவைகளை பெண் வீட்டார் நஷ்டஈடாக தரும்படி கேட்டு நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் மணமகன் வீட்டார் புகார் அளித்தனர்.