2019 சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பா பிரசாத் பார்ககான் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் மிகவும் இளையவர் இவர்தான்.
இவர் மகளிர் தினமான நேற்று சட்டமன்றத்திற்கு குதிரையில் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவர் காங்கிரஸ் எம்எல்ஏ என்பதால் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குதிரையில் வருகிறார் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் சர்வதேச மகளிர் தினத்தன்று ஓய்வு பெற்ற கர்னல் ரவி ரத்தோர் தனக்கு குதிரையை பரிசாக வழங்கினார் என்றும் அதனால் அதில் சட்டமன்றத்தில் வருவதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏ குதிரையில் வந்ததை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.