அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விமானம் 107 பயணிகளுடன் மேற்கு பசிபிக் பெருங்கடலில் சென்றபோது காணாமல் போனது.
* 1926 – முதலாவது திரவ- எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார். * 1939 – பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை ஜெர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார். *
1942 – முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது). * 1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.
* 1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் ஜெர்மனியின் வூர்ஸ்பேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1985 – அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991-ல் விடுதலை ஆனார். * 1988 –
ஈராக்கில் குருதிய நகரான ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
* 2006 – மனித உரிமைகளுக்கான ஐ.நா. அமைப்பை உருவாக்குவதற்கு ஐ.நா.வின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.