அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய – அமெரிக்கரான சோனல் புச்சாரின் பெயரில் தொடக்கப் பள்ளி நிறுவப்பட உள்ளது.
இதற்கு ஃபோர்ட் பெண்ட் சுதந்திர பள்ளி அறங்காவலர் குழு ஏகமனதோடு சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவரது சமூக பணியும், சேவையும் அடுத்த தலைமுறையை சார்ந்த மக்களிடமும் பரவும் என நம்புவதாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019-இல் புற்றுநோயினால் சோனல் உயிரிழந்தார். மும்பையை சேர்ந்த அவர் கடந்த 1984 இல் அமெரிக்காவின் ஹூஸ்டனில் குடியேறினார்.
அங்கு சமூக செயற்பாட்டாளராக இயங்கிய அவர் மக்களுக்காக அயராது பணியாற்றியுள்ளார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்காக டெக்சாஸ் பகுதியில் பல அறப்பணிகளையும், திட்டங்களையும் அவர் முன்னெடுத்துள்ளார்.
இது அவளது சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் என சோனலின் கணவர் தெரிவித்துள்ளார். வரும் 2023 முதல் அவரது பெயரிலான பள்ளி இயங்க தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.