உலகப் பொருளியல் அரங்கு அமைப்பு தனது 2021 ஆம் ஆண்டு கூட்டத்தை சிங்கப்பூரில் நடத்த முன்பு காட்டிய ஆர்வத்தைத் தொடர்கிறது என்று ஜெனிவாவில் உள்ள செய்தித்தாள் ஒன்று கூறியது.
“எங்கள் கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று உலகப் பொருளியல் அரங்கின் நிர்வாக இயக்குநர் அலோய்ஸ் ஸிவிங்கி தெரிவித்ததாக அந்தச் செய்தித்தாள் கூறியது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இயல்பாக ஜனவரி மாதத்தில் நடைபெறும் இந்தக் கூட்டம், கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் கூட்டம் நடைபெறும் இடத்தை மாற்றுவதாக முடிவு எடுக்கப்பட்டது. 2022 இல் கூட்டம் மீண்டும் டாவோசுக்குத் திரும்பும்.