பெண்களுக்கு தொந்தரவு

 –சுந்தர் பிச்சையிடம் புகார்

மவுன்டன்வியூ :’
கூகுள்’ நிறுவனத்தில், சக ஊழியர்களின் தொந்தரவில் இருந்து பாது காக்கும்படி, அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு, 500க்கும் அதிகமான பெண்கள் கடிதம் எழுதிஉள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மவுன்ட்வியூவில் உள்ளது, கூகுள் நிறுவனத்தின் தலைமையகம். இங்கு பணியாற்றிய, எமி நெய்ட்பீல்டு என்பவர், ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அதில், கூகுள் அலுவலகத்தில், தனக்கு தொல்லை கொடுத்தவர் குறித்து பலமுறை புகார் அளித்தும், நிறுவனம் அலட்சியப் படுத்தியதாக தெரிவித்திருந்தார். தொல்லை கொடுத்த வருடன் இணைந்து பணியாற்ற சொன்னதோடு, விரும்பினால், வீட்டில் இருந்து பணியாற்றலாம் என, கூகுள் தலைமை தெரிவித்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஒரு கட்டத்தில் தொல்லையைத் தாங்க முடியாமல் பணியில் இருந்து வெளியேறிய பின்னர் தான், இதேபோல பல ஊழியர்கள், பாலியல் இனவெறி தொல்லைகள் அனுபவித்தது தெரியவந்ததாக, கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு, தாங்கள் அனுபவித்து வரும் தொல்லையில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படி கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், எமி நெய்ட்பீல்டு பிரச்சினையை சுட்டிக் காட்டியதுடன், கூகுள் எப்படியெல்லாம், தொல்லை கொடுத்தவர்களைக் காப்பாற்றி வந்தது என்பதை உதாரணங்களுடன் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: ஊழியர்களின் புகார்களை புலனாய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. புகார் அளிப்போருக்கு புதிய பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளன.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here