கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த 73 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை, தான் தனியாக வாழ்ந்து வருவதால் தனக்கு துணை தேவை என்று கூறியுள்ளதோடு, அதற்காக சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்.
இவர் கொடுத்துள்ள விளம்பரத்தில், தன்னைவிட 3 வயது அதிகமாகவும், ஆரோக்கியமாகவும், பிராமணர் சமூகத்தில் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று கூறியுள்ளார்.
குறித்த ஆசிரியை தனக்கு திருமணம் நடைபெற்று விவாகரத்து ஏற்பட்டுவிட்டதாகவும், பெற்றோர்கள் இறந்த நிலையில், நண்பர்கள், உறவினர்கள் என யாரும் இல்லாமல் கடந்த 30 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
தற்போது தனிமை தன்னை பயத்தினை ஏற்படுத்துவதாகவும், இனி இருக்கும் வாழ்நாட்களை ஒரு நல்லதுணையுடன் நிம்மதியாக பயமில்லாமல் கழிப்பதுடன், நடைப்பயிற்சி, வெளியே சென்று வருவதற்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆசிரியை கொடுத்த விளம்பரத்தின் பெயரில் பலரும் அவரைத் தொடர்பு கொண்டு வரும் நிலையில், தற்போது 69 வயதான என்ஜினியர் ஒருவர் இவரது விண்ணப்பத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கமெண்ட்: அறுபதிலும் ஆசை வரும். மனத்தின் வயசு அறிந்தவர் இல்லையே!