ஐ.நா. பொதுச்செயலாளர் பொறுப்புக்கு ஏற்றவர்!
ஐக்கிய நாடுகள் என்பது ஒருமித்த கருத்துகளுக்குச் செவி சாய்க்கும் ஓர் அமைப்பாக இருந்து வருகிறது.
இதைக் கட்டிக் காத்து ஆளும் பொறுப்புள்ளவர் தனி வெறுப்பு விருப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதில் தற்போதைய பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறார். இக்கருத்தை பல நாடுகள் ஒப்புக்கொள்ளும் என்றே தோன்றுகிறது.
இதை இந்தியா முன்மொழிந்திருக்கிறது. இதில் மாற்ருகருத்துகள் இருக்காது என்றே நம்பப்படுகிறது.
நியூயார்க்:
இந்த நிலையில் ஆன்டனியோ குட்டரெசை மீண்டும் ஐ.நா. பொதுச்செயலாளராகத் தேர்வு செய்வதற்கு இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ‘‘ஐ.நா. பொதுச்செயலாளரின் தலைமைத்துவத்துக்கு, குறிப்பாக இதுபோன்ற சவாலான காலங்களில் இந்தியா மதிப்பளிக்கிறது.