எட்டு நாட்களாக எரியும் கப்பல்; இரசாயணக் கழிவுகளால் திக்கு முக்காடுகிறது இலங்கை

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த கப்பலில் அடங்கியிருந்த இரசாயணங்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக இலங்கை கடல் சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கப்பூர் கொடியின் கீழ் பயணம் செய்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எத்தனோல், 25 தொன் நைட்ரிக் அமிலம், இரசாயணப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய 1,486 கொள்கலன்கள் கப்பலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பிடித்து எரிந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கொள்கலன்களில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் இரசாயணப் பொருட்களால் நீண்ட கால புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது மேலாளர் டர்னி பிரதிப் குமார தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தயவு செய்து அந்த கடல் பகுதிக்கு வருகைத்தர வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிக நச்சுத்தன்மை உடலுக்கு பெரிய ஆபத்துகளை ஏற்படுத்த கூடும். அந்த மணல்களை தொடுவதனையும் தவிர்க்க வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here