நகை விற்பதுபோல் நாடகம்
மலாக்கா-
நகை விற்பனை முகவராக அறிமுகமான இந்தோனேசியப் பெண்ணிடம் 36 வயது குடும்பமாது 61 ஆயிரம் வெள்ளியை இழந்தார் என்று மலாக்கா வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் தலைவர் சுப்பிரிண்டென்டன்ட் சுந்தரராஜன் கூறினார்.
ஜாசின் மெர்லிமாவைச் சேர்ந்த இந்தப் பெண் கட்டங்கட்டமாக அந்த இந்தோனேசியப் பெண்ணிடம் 61,912 வெள்ளி 50 காசை வங்கியில் செலுத்தியிருக்கின்றார்.
மோதிரம், கால்சங்கிலி, காதணி, காப்பு என பலவிதமான நகைகளை வாங்க அவர் பணத்தைக் கொடுத்திருக்கின்றார். ஆனால் பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் புகார் செய்தார்.
ரெ. மாலினி