மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் ஏவப்பட்ட நாள்: ஜுன் 2, 2003
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சார்பாக செவ்வாய் கோளை ஆராய அனுப்பப்பட்ட விண்கலமே மார்ஸ் எக்ஸ்பிரஸ்.
மார்ஸ் எக்ஸ்பிரஸுடன் விஞ்ஞானிகள் பீகிள் என்ற ரோபோவையும் அனுப்பி வைத்தார்கள். இது ஒரு மீட்டர் உயரம் உள்ள ரோபோவாகும். இதை வடிவமைத்தவர் இங்கிலாந்தை சேர்ந்த காலின் பிலிஜ்ஜர் ஆவார். பீகில்-2 பத்திரமாக பாராசூட் உதவியுடன் தரையிறக்கப்பட்டது. ஆனால் அது எலக்ரானிக் பாகங்களில் ஏற்பட்ட கோளாரினால் அது செயலிழந்து.
ரோபோ செயலிழந்தாலும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் இதுவரை செவ்வாயை ஆராய்ந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் பனிப்பிரதேசம் இருப்பதற்கான அறிகுறிகளை 2004 ஜனவரியில் கண்டுபிடித்தது.
அதில் 87 சதவிகிதம் கார்பன்-டை-ஆக்சைடும்,13 சதவிகிதம் பனியும் இருப்பது தெரியவந்துள்ளது. மீத்தேன், அம்மோனியா போன்ற வாயுக்கள் அங்கு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.