பாதுகாவலர் பொது ஓய்விட பகுதியில் இறந்து கிடக்க காணப்பட்டார்

அம்பாங்கின் தாமான் கெராமட், ஜாலான் ஏயூ 2 இல் உள்ள ஒரு பொது ஓய்வு பகுதியில்  காலை 6.47 மணியளவில் சடலம் இருப்பதாக எங்களுக்கு  பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட உதவி ஆணையர் மொஹமட் பாரூக் எஷாக் தெரிவித்தார்.

இறந்தவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருக்கிறது எனவும் அவர் 55 வயதான அப்துல்லா உசேன் என்று அறியப்படுகிறது. பாதுகாவலராக இருக்கும் அவ்வாடவரின் வீடு இறந்த இடத்தில் இருந்து அருகாமையில் இருப்பதாக அறியப்படுகிறது.

இறந்தவரின் உடல் (HUKM) தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.பிரேத பரிசோதனை முடிவுகள் பாதிக்கப்பட்டவரின் இறப்புக்கான காரணம் மாரடைப்பால் என கண்டறியப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here