ஹாங்காங்கில் ரோபோ பயன்பாடு
முன்களப்பணியாளர்களில் தாதியரே கவனமுடன் இருக்க வேண்டியவர்கள். அவர்களின் பாதுகாப்புக்கு அவர்களே பொறுப்பு என்று இருக்கும்போது அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டும் கொரோனா நோயாளிகளுக்குச் சேவை செய்வதும் மிகவும் கடினமானது.
இதற்கும் வழி பிறந்திருக்கிறது.
கொரோனா நோயாளிகளைக் கவனிப்பதற்காகப் புதிய வகை ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரச்சினை என்று வரும்போதுதானே புதுமைகள் தோன்றுகின்றன. அந்த வகையில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு ரோபோவுக்கு மாறியிருக்கிறது.
இந்த ரோபோவுக்கு அவர்கள் கிரேஸ் என்று பெயரிட்டுள்ளனர். முதியவர்கள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
செவிலியரைப் போல நீல நிற உடை இந்த ரோபோவுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும்இந்த ரோபோவுக்கு ஆசிய பிராந்திய அம்சங்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன.
இந்த ரோபோ தனது மார்புப் பகுதியில் உள்ளகருவிகள் மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதோடு, செயற்கை நுண்ணறிவுத் திறன் (ஏஐ) மூலம் நோயாளிகளின் பிரச்சினைகளை எளிதில் கண்டறிகிறது.
இதன்மூலம் முன்களப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.