போர்ட்டிக்ன்-
மக்காவ் மாடி கும்பலிடம் தனியார் நறுவன அதிகாரி ஒருவர் 94,000 வெள்ளியை இழந்தார் என்று போர்ட்டிக்ன் போலீஸ் தலைவர் சூப்பிண்டென்டன்ட் அய்டி ஷாம் கூறினார்.
ஜூன் 5ஆம் தேதி தொலைபேசி வழி அழைத்த நபர், உங்கள் நிறுவனம் வரி செலுத்தவில்லை எனவும் உடனடியாகப் பணம் செலுத்த வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.
அந்த அதிகாரி பின்னர் கைப்பேசியின் செயலி இணைப்புடன் அந்த நபருடன் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால், தொடர்பு கிடைக்கவில்லை. சந்தேகத்தில் அந்த அதிகாரி தனது வங்கிக் கணக்கை சோதனை செய்தபாது 94,000 வெள்ளி, மொத்தம் 11 முறை வேறொருவன் வங்கிக்கணக்கில் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
க. கலை