மலாக்கா: நகரின் முக்கிய ஈரமான சந்தை இங்குள்ள ஜாலான் துன் பாத்திமாவில் திங்கள்கிழமை (ஜூன் 14) தொடங்கி மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குள்ள 15 வர்த்தகர்களுக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மூடலின் போது முழு வளாகத்தின் கிருமி நீக்கம் செய்யப்படும்.
மற்ற வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களும் ஸ்வைப் டெஸ்ட் செய்யப்படும். சுகாதார அதிகாரிகளால் சந்தை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில மேயர் டத்தோ ஜைனல் அபு தெரிவித்தார். சுகாதார அதிகாரிகளும் தொடர்பு தடங்களை தேடி வருவதாக அவர் கூறினார்.









