நோயிலிருந்து விடுபடும் சூழல் அதிகரிக்கிறது -முஹிடின்

கோலா­லம்­பூர்:

அதி­க­மான தடுப்­பூசி நிலை­யங்­கள் திறக்­கப்­ப­டு­வ­தால் ஏராளமானோர் தடுப்­பூ­சி­க­ளைப் பெற்­று­ வ­ரு­வ­தாக அர­சு கூறு­கிறது.

ஜூன் 11 வரை மக்­கள்­தொ­கை­யில் 13 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்கொண்­ ட­னர். நாடு மெல்ல மெல்ல கொள்­ளை­நோ­யின் பிடி­யி­லி­ருந்து விடு­பட்டு விடும் என்று பிர­த­மர் முகை­தீன் யாசின் நேற்று கூறினார்.

கூட்­ட­ர­சுப் பிர­தே­சங்­க­ளான கோலா­லம்­பூ­ரும் புத்­ரா­ஜெ­யா­வும் திட்­ட­மி­டப்­பட்­ட­தற்கு முன்­ன­தாக ஆகஸ்ட் மாதத்­திற்­குள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சமூ­கத்தை உரு­வாக்­கி­வி­டும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது என்றும்  அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

மக்களின் கவனம் இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இருப்பதால் நோய்த்தடுபுக்கான சாத்தியம் நெருங்கி வருவதாக அவர் கூறினார் .

எனினும் மக்கள் இன்னும் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here