குண்டர் கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 11 பேர் கைது

தந்தையர் தின கொண்டாட்டத்திற்காக ஒரு வீட்டில் 15 பேர் கூடிய காணொளி  வைரலாகி வந்ததை அடுத்து, கெடாவில் குண்டர் கும்பல் என நம்பப்படும் 11 நபர்களை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். டிக்டாக்கில் பதிவேற்றப்பட்ட 44 விநாடி வீடியோவில், ஒரு நபர் 35 என்ற எண்ணின் வடிவத்தில் ஒரு கேக்கை வெட்டுவதைக் காணலாம் என்று கெடா காவல்துறைத் தலைவர் கமாருல் ஜமான் மமத் கூறினார்.

கூலிமில் நேற்று இரவு 10 மணி முதல் தனிநபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார். இந்த சம்பவம் சந்தேக நபரின் வீடு ஒன்றில் நடந்தது, அங்கு அவர் தந்தையர் தினத்தையும் கொண்டாடினார். கொண்டாட்டத்தில் பங்கேற்ற 25 முதல் 61 வயது வரையிலான நபர்கள் சந்தேக நபருக்கு அறிமுகமானவர்களாவர்.

இருப்பினும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குண்டர் கும்பல் 35 உடன் தொடர்புடையவர்கள் என்று பொலிசார் நம்புகின்றனர் என்று கமருல் கூறினார், மேலும்  போலீசார் மொபைல் போன்கள் மற்றும் நகைகளை (மோதிரங்கள்) பறிமுதல் செய்தனர்.

சந்தேக நபர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், தொற்று நோய்கள் விதிமுறைகள் 2021, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269 மற்றும் சங்கங்கள் சட்டம் 1966 இன் பிரிவு 52 (3) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here