அதிபர் ஜோ பைடன் பங்கேற்கவில்லை
இன்றைய நிலையில் உயர்மட்டத் தலைவர்கள் வெளியுறவு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வது சாத்தியமானதாக இல்லை.
விரைவில் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி இக்காலக் கட்டத்தில் அவசியம் நடத்தப்பட வேண்டுமா என்பதும் கேள்வியாக இருக்கின்றது.
பல காரணங்களை ஜோ பைடன் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்க நேர்ந்திருக்கலாம்.
வாஷிங்டன்:
வருகின்ற 23- ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 23-ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் மூத்த பிரதிநிதிகள் அரசின் சார்பில் அமெரிக்க வீரர்களுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.