மின்கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறையை அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்காக 25 கோடி பிரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.
மொத்தம் 25 கோடி பிரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். அவற்றில் முதல்கட்டமாக 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 10 கோடி நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்து இந்த மீட்டர்கள் பொருத்தப்படும்.
அதாவது, 15 சதவீதத்துக்கு மேல் மின்சார இழப்பு கொண்ட 500 ‘அம்ருத்’ நகரங்கள், அனைத்து யூனியன் பிரதேசங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக மின்இணைப்பு வைத்திருப்பவர்கள், வட்டார அளவில் அனைத்து அரசு அலுவலகங்கள், அதிக மின்சார இழப்பு உள்ள பகுதிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து இந்த மீட்டர் பொருத்தப்படும். மீட்டர் பொருத்தும் பணியின் முன்னேற்றம் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்.
அத்துடன், ‘ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா’ திட்டத்தின்கீழ், நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி பங்களிப்பை மத்திய அரசே செலுத்தி வருகிறது. இந்த சலுகை பெற பதிவு செய்வதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைய இருந்தது.
இந்த கடைசி தேதியை அடுத்த ஆண்டு மார்ச் 31- ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், அமைப்புசார்ந்த துறைகளில் புதிதாக 71 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசுக்கு ரூ.22 ஆயிரத்து 98 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.