கோலாலம்பூர், (ஜூலை 4) :
நாடாளுமன்றத்தினை சீக்கிரமாக கூட்டுமாறு அரசாங்கத்திற்கு எந்தவொரு நெருக்குதலும் கொடுக்காது என தேசிய முன்னணியின் உறுப்புக்கட்சிகளில் ஒன்றான மா.இ.காவின் தேசியத்தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அம்னோ கடையினர் அரசுக்கு பல நெருக்குதலை வழங்கிவருகின்றது. இந்த நிலையில், தகுந்த நேரத்தில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் நடவடிக்கையை மா.இ.கா அரசாங்கத்திடமே விட்டுவிடுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் மாட்சிமை தங்கிய பேரரசர் விரைவில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.