திண்டுக்கல் ஐ .லியோனிக்கு முக்கிய பதவி

தமிழக முதல்வர் உத்தரவு!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் , கல்வியியல் பணிகள் கழகம் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ லியோனியை நியமனம் செய்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்  உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாடு பாடநூல்‌, கல்விமியல்‌ பணிகள்‌ கழகம்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள பள்ளிகளுக்குப்‌ பாடப்‌ புத்தகங்களைத்‌ தயாரித்து, அச்சிட்டு விநியோகம்‌ செய்வதற்காகத்‌ தமிழக அரசால்‌ ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு நிறுவனம்‌ ஆகும்‌.

இக்கழகம்‌ மூலம்‌ அச்சிடப்படும்‌ பாடநூல்கள்‌ அரசு, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளுக்கு இலவசமாகவும்‌, தனியார்‌ பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும்‌ கட்டணத்திலும்‌ வழங்கப்படுகின்றன.

ஒன்றாம்‌ வகுப்பு முதல்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு வரை தமிழ்‌ , ஆங்கில வழிப்‌ பாடநூல்கள்‌, சிறுபான்மை மொழிப்‌ பாடநூல்கள்‌, மேல்நிலைப்‌ பள்ளிக்கான தொழிற்கல்விப்‌ பாடப்புத்தகங்கள்‌, ஆசிரியர்‌ பட்டயப்‌ பயிற்சிக்கான பாடப்‌ புத்தகங்கள்‌, பல்நுட்பக்‌ கல்லூரிக்கான பாடப்‌ புத்தகங்கள்‌ ஆகியவற்றைத்‌ தயாரிக்கும்‌ பணியை இக்கழகம்‌ திறம்பட மேற்கொண்டு வருகின்றது.

1960 மற்றும்‌ 1970ஆம்‌ ஆண்டுகளில்‌ வெளிவந்த பாடநூல்களை மீட்டுருவாக்கம்‌ செய்து, இணையத்தில்‌ கொண்டுவரும்‌ ஜந்தாண்டுத்‌ திட்டத்தை 2017லிருந்து இந்நிறுவனம்‌ செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம்‌ பல்வேறு அரிய நூல்களை மறுபதிப்பு செய்யும்‌ பணிகளை மேற்கொள்வதோடு, மொழிபெயர்ப்புப்‌ பணிகளையும்‌ மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு பாடநூல்‌ நிறுவனம்‌ , கல்வியியல்‌ பணிகள்‌ கழகம்‌ தனது பணிகளைச் செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள, இந்நிறுவனத்தின்‌ புதிய தலைவராக  திண்டுக்கல்‌ ஐ. லியோனியை  தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க, ஸ்டாலின்‌  நியமனம்‌ செய்து ஆணையிட்டுள்ளார்.

திண்டுக்கல்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த திண்டுக்கல்‌ ஐ. லியோனி  சிறந்த ஆசிரியர்‌, மேடைப்‌ பேச்சாளர்‌, இலக்கியச்‌ சொற்பொழிவாளர்‌, நகைச்சுவைப்‌ பட்டிமன்ற நடுவர்‌ ஆவார்‌. இவருக்கு 2010 ஆம்‌ ஆண்டிற்கான கலைமாமணி விருது தமிழக அரசால்‌ வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here