ஜெய்ப்பூர்-‘
இந்தியர் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரபணு இருக்கலாம். ஆனால், மாட்டு இறைச்சி சாப்பிடுவோருக்கான மரபணு நிச்சயம் வேறாகத்தான் இருக்கும், என, வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சாத்வி பிராச்சி கூறியுள்ளார்.
மரபணு இந்தியர் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரபணு உள்ளது. முஸ்லிம்களை வேறு நாடு செல்லும்படி கூறுவோர், ஹிந்துக்களாக இருக்க முடியாது’ என, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வி.எச்.பி.,யைச் சேர்ந்த சாத்வி பிராச்சி பேசியதாவது: மோகன் பாகவத் கூறியதுபோல், இந்தியர்கள் அனைவரின் மரபணுவும் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் மரபணு, நிச்சயம் ஹிந்துக்களிடம் இருப்பதுபோல் இருக்காது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த, இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றெடுப்போருக்கு, அரசின் சலுகைகளை நிறுத்த வேண்டும். தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமையையும் நீக்க வேண்டும். எத்தனை மனைவியர் இருந்தாலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்கக் கூடாது என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் கூறினார்.