நிபாங் திபால்: சுங்கை ஜாவியில் ஒரு பாமாயில் ஆலை ஒன்று தீ விபத்துக்குள்ளானது என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (ஜூலை 22) நள்ளிரவுக்குப் பிறகு அவர்களுக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்ததாக அத்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்ததும், தீ ஆலையின் மூல பாமாயிலுக்கான சேமிப்பு கிடங்கில் இருந்ததைக் கண்டறிந்தனர். இந்த தீ 4,180 சதுர மீட்டர் பரப்பளவில் 60% சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாடு மற்றும் அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
யாரும் இத்தீ விபத்தில் பாதிக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிபோங் தெபால் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களுக்கு சுங்கை பக்காப், ப்ராய் மற்றும் பாயன் பாரு தீயணைப்பு நிலையங்களும் உதவி வருகின்றன.