கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவு
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவின் சான்றிதழைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், “அதிகபட்சம் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் பயணிக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.