கோலாலம்பூர்: தடுப்பூசி நியமனங்களைப் பெற்றுக்கொள்ளாத அல்லது தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு இதுவரை பதிவு செய்யாத கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், பள்ளி செயல்படுத்தும் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் உதவி ஊழியர்கள் உடனடியாக நியமனங்கள் இன்றி தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு (Walk-in) சென்று, தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் கீழ் உள்ள சிறப்பு குழுக்களுக்கு நாடு தழுவிய தடுப்பூசி மையங்களுக்கு (walk -in) சென்று தங்களுக்குரிய தடுப்பூசியை சீக்கிரமாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (CITF) இம் முடிவை இது பின்பற்றுவதாக கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் கூறினார்.
ஆசிரியர் மற்றும் பள்ளி செயல்பாட்டுடன் தொடர்புடையவர்களுக்கான நியமனங்கள் இன்றி நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று (walk-in) தடுப்பூசி பெறுவது பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்,” என்று அவர் நேற்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
கல்வி அமைப்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் அவரது அமைச்சகம் மற்றும் CITF இணைந்து உருவாக்கியுள்ள சிறப்பு பணிக்குழு மூலம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.
மேலும் CITF , நேற்று வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்படுத்தப்படும் வாக்-இன் தடுப்பூசி செலுத்தும் முயற்சி விரைவில் சிறப்பு குழுக்களுக்காக நாடு தழுவிய பொது தடுப்பூசி மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தது.
Walk-in முறையில் நியமனங்கள் இன்றி இதுவரை தடுப்பூசி பெறாத முதியவர்கள், உடல் குறைபாடுகள் உள்ளவர்கள், 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், தங்கள் இரண்டாவது டோஸை தவறவிட்டவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி செயல்பாட்டு குழுவின் உறுப்பினர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆதரவு சேவை ஊழியர்கள் நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று தங்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
கல்வி அமைச்சின் பதிவுகளின்படி, இதுவரை மொத்தம் 352,649 ஆசிரியர்கள் (85.41%), 52,256 பள்ளி செயல்பாட்டுக் குழு உறுப்பினர்கள் (77.69%) மற்றும் 54,930 பள்ளி சேவை/வேன் ஆபரேட்டர்கள் (46.64%) ஆதரவு சேவை ஊழியர்கள் குறைந்தது ஒரு டோஸ் பெற்றுள்ளதாக ராட்ஸி கூறினார்.
“மொத்தம் 84,995 பரீட்சை வகுப்பு ஆசிரியர்களும் (94.89%) தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.









