கோம்பாக் பத்து 6 இல் உள்ள ஒரு நகைக்கடையில் மூன்று கொள்ளையர்கள் புகுந்து 200,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளை கொள்ளையிட்டு சென்றனர். புதன்கிழமை (செப்டம்பர் 8) மாலை 6.15 மணியளவில் நடந்த சம்பவத்தின் போது கொள்ளையர்கள் கறுப்பு கண்ணாடியும் ஹெல்மெட்டும் அணிந்திருந்ததாக கோம்பாக் ஓசிபிடி உதவி ஆணையர் ஜெய்னல் முகமது கூறினார்.
சந்தேக நபர்களில் ஒருவர் ஆயுதம் ஏந்தி வளாகத்தின் நுழைவாயிலில் பாதுகாப்புடன் நின்றிருந்தார். மற்ற இருவரும் நகைக் கடைக்குள் சென்று நகைகளைக் கைப்பற்றினர். அவர்கள் திருடி விட்டு தப்பி ஓடுவதற்கு முன்பு, சந்தேக நபர்களில் ஒருவர் அந்த வளாகத்தின் உரிமையாளரின் முகத்தில் கூட அடித்தார் என்று வியாழக்கிழமை (செப்டம்பர் 9) தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து சந்தேக நபர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். நாங்கள் சந்தேக நபர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர் கூறினார். தகவல் தெரிந்தவர்கள் 03-61262222 / 019-5230801 அல்லது அருகில் உள்ள காவல்நிலையங்களில் விசாரணை அதிகாரி அகிலன் ஈஸ்வரனை தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி ஜெய்னல் முகமது கேட்டுக் கொண்டார்.