ஜோகூர் பாரு: இரசாயன கசிவு காரணமாக, கம்போங் பாரு ஸ்ரீ அமனில் உள்ள சில வீடுகள் காலி செய்யப்பட்டதோடு, நேற்று (செப்டம்பர் 14) இரண்டு பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அபாயகரமான பொருட்கள் பிரிவின் தலைவர் சைஃபுல் பஹ்ரி சஃபர் செவ்வாய்க்கிழமை இரவு 10.22 மணியளவில் தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், 15 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு குழு சென்றததாகவும் கூறினார்.
பாதிக்கப்பட்ட 20 வயது மற்றும் 40 வயதில், மூச்சுத் திணறல் காரணமாக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை மற்றும் சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அவசர மருத்துவ பதில் சேவைகள் (ஈஎம்ஆர்எஸ்) அனுப்பப்பட்டனர் என்று அவர் கூறினார்.
நாங்கள் ஆற்றிலும் மேலும் சிற்றோடைப் பகுதியில் இரசாயனக் கசிவு இருப்பதைக் கண்டறிந்தோம் என்று அவர் நேற்றிரவு சம்பவ இடத்தில் கூறினார்.
சைஃபுல் பஹ்ரி ஆரம்ப சோதனைகளில் 120 பிபிஎம் (மில்லியனுக்கான பாகங்கள்) செறிவில் மெத்தில் ஆல்கஹால் என சந்தேகிக்கப்படும் ஒரு ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆற்றில் இருந்து 150 மீ தொலைவில் உள்ள ஐந்து வீடுகளில் உள்ள கிராமவாசிகள் தங்கள் வீடுகளை காலி செய்து பொது மண்டபத்திற்கு செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தினார்.
இப்போதைக்கு, நாங்கள் இந்த பகுதியை கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம். மேலும் இந்த கசிவின் மூலத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
கெம்பாஸ், லார்கின் மற்றும் ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலையங்களில் இருந்து 24 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதன்கிழமை (செப்டம்பர் 15) அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, கசிவு கண்டறியும் முயற்சிகள் தொடர்கின்றன மற்றும் சுற்றுச்சூழல் துறை (DoE) மற்றும் மலாக்கா அபாயகரமான பொருட்கள் பிரிவிலிருந்து உதவி கோரப்பட்டுள்ளது.